தேசிய SME ஆதரவு கருத்தரங்கிற்கு தொழில் முனைவோருக்கு அழைப்ப

தொழிலதிபர்களின் சவால்களுக்கு தீர்வு காண அதிகாரிகளுடன் இணைக்கும் முயற்சி

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SME) தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் இந்த துறையை கடுமையாக பாதித்துள்ளன.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை பாதித்தன. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய் காரணமாக நீண்டகால முடக்கநிலைகள், விநியோக தடைகள் மற்றும் சந்தை வீழ்ச்சி ஏற்பட்டது.

பின்னர் நாட்டில் ஏற்பட்ட மக்க

போராட்டங்கள் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்கள் பற்றாக்குறை, செலவு அதிகரிப்பு மற்றும் நிதி வசதிகளுக்கான அணுகலில் சிரமங்கள் ஏற்பட்டன. டித்வா சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களும் இந்த சவால்களை மேலும் அதிகரித்துள்ளன.

SME துறை இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 52% பங்களிப்பை வழங்குவதுடன், நாட்டின் 45% தொழிலாளர் படைக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மன்றம் (SLCSMI) தொழிலதிபர்கள் மற்றும் SME உரிமையாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு, அதற்கான தீர்வுகளை அதிகாரிகளுடன் இணைந்து காண முயற்சி செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் சிறப்பு SME கருத்தரங்கு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்புபவர்கள் SMS மூலம் கீழ்க்கண்ட தகவல்களுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

• பெயர்

• தொடர்பு எண்

• தொழில் முகவரி

• தொழில் துறை

தொழில் முனைவோர் ஒன்றிணைந்து தங்கள் சவால்களை முன்வைப்பதன் மூலம் நடைமுறை தீர்வுகளை கண்டறிந்து நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பங்களிக்க முடியும்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தயவுசெய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுடன் 2026 மார்ச் 20 ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது வாட்ஸ்அப் எண்ணிற்கு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

📧 Email: slcmi@sltnet.lk

📱 WhatsApp: 0774586940